மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிப்பு... தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி... 

பல்வேறு மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 44 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது. 

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிப்பு... தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி... 

கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது.

சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பொது செலவினங்களை எதிர்கொள்ள, மாநிலங்களுக்கு இந்த இழப்பீட்டு தொகை உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாயை ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.