இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 20 யூடியூப்கள் முடக்கம்..!

தவறான தகவல்களை பரப்புவதாக புகார்..!

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 20 யூடியூப்கள் முடக்கம்..!

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்புகள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மற்றும் இணையத்தில் பொய் செய்திகளைப் பரப்புவதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதங்களை முடக்க அமைச்சகம் கடந்த 20-ம் தேதி (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவையாகும். இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து போலிச் செய்திகளை இவை பரப்புகின்றன. 

காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர்கோவில், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட இந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஒரு சேனல் தமிழ் புலிகள் குறித்த காணொலி ஒன்றையும் வெளியிட்டது. நயா பாகிஸ்தான் குழுமத்துடன் தொடர்புடைய மற்றும் தனித்து செயல்படும் இந்த சேனல்களில் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இவற்றின் காணொலிகள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. இனி இதுபோன்று இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் இணையதளங்கள் மற்றும் 
யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.