மாஜி அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!  

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜமிர் அகமது கான், ரோஷன் பெய்க் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மாஜி அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!   

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜமிர் அகமது கான், ரோஷன் பெய்க் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள், ஜமிர் அகமது கான் மற்றும் ரோஷன் பெய்க் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்த நிலையில், கணக்கில் காட்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.