தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு.. முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்!!

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு.. முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்!!
Published on
Updated on
1 min read

பங்குச்சந்தையின் முக்கிய தகவல்களை மர்ம சாமியாரிடம் பகிர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை , 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு சித்ரா ராமகிருஷ்ணா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறபித்தார். சிசிடிவி கண்காணிப்புடன் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com