முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்... ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி செலுத்தினர்...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்... ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி செலுத்தினர்...

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி காலமானார். இந்நிலையில், அவரது மறைவின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் வாஜ்பாய்  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.