அனைவரும் கேமராவை ஆன் செய்யுங்கள்.. கடைசியாக உயிர் பிரியும் முன்பு ஆசிரியை நெகிழ்ச்சி...

கேரளாவில் தனது மாணவர்களை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் கேமராவை ஆன் செய்யுங்கள்.. கடைசியாக உயிர் பிரியும் முன்பு ஆசிரியை நெகிழ்ச்சி...

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான மாதவி, ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்பொது ஆசிரியை தனது மாணவர்களுக்கு வீடியோவை மியூட் செய்து ஆடியோ வழியாகப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. உடனே ஆசிரியர் மாதவி, 'தாம் உங்களைப் பார்க்க வேண்டும் என்றும், வீடியோவை ஆன் செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவர்கள் வீடியோவை ஆன் செய்தனர். பிறகு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அடுத்த வகுப்பில் பார்க்கலாம்' எனவும் கூறி வகுப்பை முடித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இது குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.