லாக்கப்பில் போதை ஆசாமி பாடிய பாடல்... பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பு...
போதையில் மனிதர்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் மக்கள் மத்தியில் பெரும் வைரலாகி வரும் நிலையில், போதையில் ஒற்றைக் கையில் வண்டியை நிறுத்துவது கார் கண்ணாடியை உடிப்பது என தவறான முறையில் ட்ரெண்டான பலர் உள்ளனர்.
குறிப்பாக, போதையில் யூடியூப் வீடியோவில் பேசிய பலர் தற்போது தமிழ் படங்களில் காமெடி நடிகர்களாக கலக்கிக் கொண்டு வருவதையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அந்த வகையில், பீகாரின் தடைச் சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞன் ஒருவன், ஒரே இரவில் ஒரு வகையான பிரபலமாகிவிட்டான்!
மேலும் போதையற்ற மாநிலமான பீகாரில், போலீஸ் லாக்கப்பில் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் பாடிய பாடலுக்குப் பிறகு, பாலிவுட்டில் பின்னணி பாடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்.
சமூக ஊடகங்களில், கன்ஹையா குமார் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அண்டை மாநிலமான உ.பி.யில் இருந்து எல்லை மாவட்டத்திற்குள் நுழைந்ததற்காக கடந்த ஜாயிற்றுக்கிழமை பக்சூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரது பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பிரல பாலிவுட் இசை பிரபலமான அங்கித் திவாரி என்பவர், போதை பாடகரான கன்ஹையாவிற்கு பாலிவுட்டில் பாட வாய்ப்பளித்ததாக தகவல் வெளியாகி பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்....அதிகரிக்கிறதா ஆணாதிக்க மனநிலை!!!
TV के पूर्व सहयोगी @cmohan_pat के माध्यम से संपर्क करने पर पता चला कि ये कैमूर का गरीब युवक कन्हैया है,नशे में मिलने पर बिहार पुलिस ने इसे जेल भेजा,इनकी कानूनी मदद के उपरांत इन्हें सुधारने का प्रयास होगा,साथ ही UP के मशहूर त्रिनेत्र स्टूडियो में गाने का अवसर भी उपलब्ध कराया जाएगा pic.twitter.com/Id8HrJV2HZ
— Dr. Shalabh Mani Tripathi (@shalabhmani) January 8, 2023