புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...!

புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் போதை கும்பல் அட்டகாசத்தை தடுக்க முதலமைச்சா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநில அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் முத்தியால் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதையும் படிக்க : நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் கே.என். நேரு!

மேலும் கூட்டத்தில், புதுச்சோி மாநிலத்தில் 4 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, போதை கும்பல் அட்டகாசத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் ரெஸ்டோ பார்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.