பயங்கரவாதிகள் பட்டியலை அரசியலாக்க வேண்டாம் - டெல்லி குவாட் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

பயங்கரவாதிகள் பட்டியலை அரசியலாக்க வேண்டாம் - டெல்லி குவாட் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

பயங்கரவாதிகள் பட்டியலை அரசியலாக்க எக்காலத்திலும் முயற்சிக்கக் கூடாது என டெல்லி குவாட் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா,  ஜப்பான் ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லியில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகப் பரிமாற்றம், பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்டவைகளில், இம்மாநாடு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதையும் படிக்க : 22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தால் கிடைத்த போலியான வெற்றி - ஜெயக்குமார் பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதிகள் பட்டியலை அரசியலாக்க எக்காலத்திலும் முயற்சிக்கக் கூடாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.