டாக்டர் அம்பேத்காரை ஏற்க மறுக்கிறதா பாஜக!!!

டாக்டர் அம்பேத்காரை ஏற்க மறுக்கிறதா பாஜக!!!

தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  தெலுங்கானாவின் சட்டமன்றத்தில் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்ட்ரல் விஸ்டா:

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட்டது.

பெயர் பரிந்துரை:

தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்திற்கு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்காரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.  இதற்கான தீர்மானமும் அனவராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பங்கேற்காத பாஜக:

தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் பரிந்துரையின் போது பாஜக அதனுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் ஒதுங்கியே இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீர்மானம் நிறவேற்றப்படும் போது பாஜக உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருந்தது கண்டனத்துக்குரியது எனவும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்:

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது பாஜக ஒதுங்கியிருந்ததைக் கண்டித்து ஹைதராபாத்தில் பட்டியல் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி:

தீர்மானத்தில் பங்கேற்ற காங்கிரஸுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை:

நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கார் பெயரை சூட்டுவதற்கான கோரிக்கை அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பலவீனம் அடைகிறதா காங்கிரஸ்?!! பாஜகவில் இணையும் எம்.எல்.ஏக்கள்!!தொடரும் பதவி விலகல்கள்!!