புதுச்சேரியில் அதிக அளவில் கொண்டாடப்படும் விழா எது தெரியுமா? - தமிழிசை கூறியிருக்கிறார்.. பாருங்க!!

புதுச்சேரியில் இந்திய சுதந்திரம் தொடர்பான விழாக்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அதிக அளவில் கொண்டாடப்படும் விழா எது தெரியுமா? - தமிழிசை கூறியிருக்கிறார்.. பாருங்க!!

இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில், இந்திய சுதந்திரம் தொடர்பான பெருவிழா அதிக அளவில் கொண்டாடப்படுவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முத்திரைத் திருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ அரவிந்தரின் புகைப்படக் கண்காட்சி அங்குள்ள கடற்கரைச் சாலையில் உள்ள ஆசிரம கண்காட்சி இல்லத்தில் நடைபெற்றது.

இதை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவின் முத்திரைத் திருவிழாக் கொண்டாட்டத்தை ஒட்டி புதுச்சேரியில் அதிகப்படியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்றும், நாடு முழுவதும் இதுவரை 25 ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.