பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆந்திர மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கு அம்பேத்கர் என பெயர் மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து பிரித்த கோனசீமா என்ற மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் அறிவிப்பை கடந்த மே மாதம் அரசு வெளியிட்டது.

இதனை எதிர்த்து கோனசீமா சாதனா சமிதி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீயிட்டும் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்ற பெயர் மாற்றத்துக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.