தீயாய் பரவும் டெல்டா கொரோனா.. எச்சரிக்கும் WHO...

தற்போது 111 நாடுகளில் காணப்படும் டெல்டா வகை வைரஸ் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தீயாய் பரவும் டெல்டா கொரோனா.. எச்சரிக்கும் WHO...

தற்போது 111 நாடுகளில் காணப்படும் டெல்டா வகை வைரஸ் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள டெல்டா வைரஸ் பரவியுள்ளது என்றும், டெல்டா, ஆல்பா, காமா, பேட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்களில் மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைப்பு, இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.

உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள. பீட்டா காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் பரவியுள்ளன என்றும், பல நாடுகளில் தொற்று நோய் கண்காணிப்பு பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளதால், எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.