புதுச்சேரியில் 79 பேர்களுக்கு கொரோனா தொற்று...

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் 79 பேர்களுக்கு கொரோனா தொற்று...

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 41 நபர்களுக்கும், காரைக்காலில் 17 நபர்களுக்கும், மாஹேவில் 20 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும் என மொத்தம் 79 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது மாநிலத்தில் 929 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1805 உயர்ந்து உள்ளது.  

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,19,548 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 1,22,282 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.