இந்தியாவில் ஒரே நாளில் 2,568 பேருக்கு கொரோனா பாதிப்பு - தீவிர தொற்றுக்கு 20 பேர் பலி!

இந்தியாவில் ஒரே நாளில் 2,568 பேருக்கு கொரோனா பாதிப்பு - தீவிர தொற்றுக்கு 20 பேர் பலி!

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 137 ஆக குறைந்துள்ளது. கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 568 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 137 ஆக குறைந்துள்ளது.  நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.  

நேற்று ஒரே நாளில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 795 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால்,  இந்தியாவில் தற்போது வரை 189 புள்ளி 41 கோடி  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.