குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : கேரள வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

உயிரிழந்த வீரரின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : கேரள வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீபின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த விமானப்படை ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீபின் உடல் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டு, கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சொந்த ஊரில் வைக்கப்பட்ட ராணுவ அதிகாரி பிரதீப்பின் உடலுக்கு பல்வேறு தரப்பினர் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.