பெகாசஸ் விவகாரம்... அனைத்து மாநில ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு...

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு

பெகாசஸ் விவகாரம்... அனைத்து மாநில ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு...
பெகாசஸ் செயலியைப் பயன்படுத்தி பிரபலங்களின்  செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
 
இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பமான பெகாசசை பயன்படுத்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் உளவுபார்க்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டது. 
 
இந்நிலையில் இந்தப் பிரச்சனை நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளர்களை சந்தித்து, விளக்கம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
 
மேலும் அந்தந்த மாநிலங்களின் தலைநகரில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி நாளைமறுநாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.