நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து காங். ஆலோசனை!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில், பிஎஃப். வட்டி குறைப்பு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து காங். ஆலோசனை!!

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது.

இதனையொட்டி, டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற வியூகக்குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வில், நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, உக்ரைனிலிருந்து மருத்துவ மாணவர்களை வெளியேற்றுவதில் ஏற்பட்ட தாமதம், பி. எஃப். வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.