புதுச்சேரியில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ரங்கசாமி!  

புதுச்சேரியில் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார்.

புதுச்சேரியில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ரங்கசாமி!   

புதுச்சேரியில் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கடற்கரை சாலை காந்தி சிலை முனபு நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலை மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.