
கேரள மாநிலம் மலப்புறம் அருகே செம்மாடு பகுதியில் நேற்று மாலையில் வழக்கும் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது.
இந்த விபத்தில் படும்காயமடைந்த மூன்றுபேரை கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.