நாடு முழுவதும் நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில்  3 மக்களவை  மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

நாடு முழுவதும் நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் அசாம்கர் தொகுதி எம்பி அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்பூர் எம்பியான சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அசாம்கானும்  சட்டமன்றத்திற்கு தேர்வானதால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதேபோல் பஞ்சாப் முதல்வரானதால் சங்ரூர் தொகுதியில் பகவந்த் மான் ராஜினாமா செய்தார். இதனால் இந்த 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், பல்வேறு காரணங்களால் காலியாக இருந்த டெல்லி ராஜிந்தர்நகர்,  ஜார்கண்டின் மந்தர், ஆந்திராவின் அத்மாகூர் மற்றும் திரிபுராவின் அகர்தலா, போர்டோவாலி, சுர், ஜூபராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. இதில் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.