“பின்ன ‘காண்டம்’ கொடுக்கனுமா?” என மாணவியிடம் கேட்ட ஐஏஎஸ் அதிகாரி மன்னிப்பு!
மாணவி ஒருவரிடம், ஐஏஎஸ் அதிகாரி, அடுத்து உங்களுக்கு காண்டம் வேண்டுமா? என கேள்வி எழுப்பிய சர்ச்சைக்கு தனது மன்னிப்புகளை தெரிவித்துள்ளார்.
20-30 விலையில் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா என்று பீகாரின் மகளிர் மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநராக இருக்கும் அதிகாரி ரியா குமாரி கேட்டதற்கு, “இன்று, நீங்கள் சானிட்டரி பேட்களைக் கேட்கிறீர்கள்; நாளை நீங்கள் ஆணுறைகளைக் கேட்பீர்கள், ”என்று அதிகாரத்துவமாக பதிலளித்தார் ஐஏஎஸ் அதிகாரி.
மேலும் படிக்க | பெண்களை அனுப்ப தாமதம் : பாலியல் தரகரை வசைபாடியதால் ஆத்திரம் : தொழிலதிபர் கொலை வழக்கில் அம்பலம்!!
பீகாரின் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கோர் பாம்ரா என்பவரிடம் பாட்னாவைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விலை மலிவான சேனிடரி பேடுகளை வழங்கக் கோரிக்கை வைத்ததற்கு, இந்த பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரி மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் படிக்க | 2047 இல் வளமான இந்தியா..! குடியரசுத் தலைவர் கூறுவது எதை?
மேலும், மக்களின் வாக்குகள் தான் யார் ஆளுபவர் என்பதை தீர்மானிக்கிறது என்று சிறுமி கூறியதற்கு, ஹர்ஜோத், "இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியானால் வாக்களிக்காதீர்கள். பாகிஸ்தானை போல நீங்களும் ஆகுங்கள். அப்போது பணத்திற்காகவும் சேவைக்காகவும் தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்களா?" என்று கேட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
ஒரு மாணவி, பெண்களின் அடிப்படை தேவை மிக அதிக விலையுடன் பெரிய வரிகளுடன் விற்கப்படுவதால் கேள்வி எழுப்பிய நிலையில், தானே ஒரு பெண்ணக இருப்பின், அதுவும் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அவர் பேசிய கருத்துகள் பலராலும் எதிர்க்கப்பட்டது.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் இறங்கி தாக்கிய இந்தியா....ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்....
இது குறித்து கேள்வி எழுப்பிய மாணவி, “நான் கேட்ட கேள்வியில் எந்த தவறும் இல்லையெ. நான் சேரியில் வாழ்வதால் என்னால் பணம் செல்வழித்து நேப்கின்களை வாங்க முடியவில்லை. அதனால் தான் நேப்கின்களை மலிவாக விற்கக் கோரி கேட்டேன். இது சண்டை போடுவதற்கோ இல்லை சர்ச்சையாக்குவதற்கோ நான் எதுவும் பேசவில்லை” என பத்திரிக்கையாளர்களிடம் கூறிய நிலையில், அந்த ஐஏஎஸ் அதிகாரி மீது பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கினர்.
மேலும் படிக்க | பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன நோக்கத்துடன் இது செயல்படுகிறது? தெரிந்துகொள்வோம்....!!!
செப்டம்பர் 27 அன்று நடந்த ஒரு விழாவில் நடந்த சம்பவம், பாஜக தொண்டர் ஒருவரால் பகிரப்பட்ட வீடியோவுக்குப் பிறகு சமூக ஊடக தளங்களில் இந்த சம்பவம், பல விமர்சனங்களை ஈர்த்தது. அதிலும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான மாநிலத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்' (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) நடத்தப்பட்ட ஒரு பட்டறையில் இது நடந்ததால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக தலைவர் அம்ரிதா ரத்தோட், "நிதிஷ்-தேஜஸ்வி அரசாங்கத்தின் ஐஏஎஸ் அதிகாரியைச் சந்திக்கவும், அவர் சானிட்டரி பேட்களை நாடியதற்காக ஒரு மாணவரை பாகிஸ்தானுக்குச் செல்லச் சொன்னார்" என்று கூறினார்.
மேலும் படிக்க | பாஜகவை வீழ்த்த.. நிதிஷ், லாலு சொல்லும் ரகசியம்..!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இது குறித்து “மாநில பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஐஏஎஸ் அதிகாரியின் நடத்தை அந்த ஆவிக்கு விரோதமாக இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறினார்.
மேலும் படிக்க | மின் ஊழியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவில்லையென்றால்...காங்கிரஸ் எச்சரிக்கை!
இதற்கிடையில், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து எழுந்த சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து கையொப்பமிட்ட அறிக்கையை அதிகாரி வெளியிட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மாவும் இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியிடம் 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளார்.
--- பூஜா ராமகிருஷ்ணன்
अब नितिश-तेजस्वि सरकार के IAS से मिलिए। हरजोत कौर बिहार की बेटियों को सानिटरी नैपकिन माँगने पर पाकिस्तान भेजेंगी। pic.twitter.com/VjVv0EF0AP
— Dr. Amrita Rathod BJP (@AmritaRathodBJP) September 28, 2022