மாஸ்க் முகத்திற்கு இல்லை... கால் பெருவிரலில் தொங்கிவிட்டிருந்த பாஜக அமைச்சர்...

உத்தரகாண்ட் அமைச்சர் சுவாமி யாதீஷ்வரானந்த் தனது முககவசத்தை கால் பெருவிரலில் தொங்கவிட்டிருந்த  புகைப்படம் வைரலாகி, நெட்டிசன்கள் பலரது கண்டனத்திற்கு அவர் ஆளாகியுள்ளார்.

மாஸ்க் முகத்திற்கு இல்லை... கால் பெருவிரலில் தொங்கிவிட்டிருந்த பாஜக அமைச்சர்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மூடிய அறைக்குள் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பிற கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். ஆனால், அவர்களில் பிஷான் சிங் சூபல், சுபோத் உன்னியால் உள்ளிட்டோர் முககவசம் அணிந்திருக்க,  அமைச்சர் சுவாமி யாதீஷ்வரானந்த், உள்ளிட்ட சில பாஜகவினர் முககவசம் அணியாமல் இருந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் குறிப்பாக யாதீஷ்வரானந்த் முககவசத்தை காலுக்கு அணிவித்திருந்தது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முககவசத்தை பாதுகாக்க மிகவும் சுத்தமான இடத்தை அமைச்சர் கண்டுபிடித்துள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ள நிலையில், காங்கிரஸும் தனது சார்பில் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.