என்ன மன்னிச்சிடுங்க.! நான் பேசியது தவறுதான்... சரண்டரான பாஜக தலைவர்!!

பாஜகவை சேர்ந்த இரு தலைவர்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட கருத்துக்கு அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சவுமித்ரா கான் பொது மன்னிப்பு கோரியுள்ளார்.

என்ன மன்னிச்சிடுங்க.! நான் பேசியது தவறுதான்... சரண்டரான பாஜக தலைவர்!!

பாஜகவை சேர்ந்த இரு தலைவர்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட கருத்துக்கு அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சவுமித்ரா கான் பொது மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்கு வங்க எதிர்கட்சி தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி, டெல்லியில் உள்ள பாஜக தலைமையை தவறாக வழிநடத்துவதாக அண்மையில் அம்மாநிலத்தின் இளைஞரணி தலைவர் சவுமித்ரா கான் முகநூலில் மறைமுகமாக சாடியிருந்தார்.

மேலும் பாஜக மூத்த தலைவரான திலிப் கோஷும், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை முழுவதுமாக அறிந்து கொள்வதில்லை என கூறியிருந்தார். இது உட்கட்சிக்கு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசிய சவுமித்ரா கான், அச்செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் மேற்கு வங்க கலவரத்தில் உயிரிழந்த பாஜக பிரமுகர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.