மேற்கு வங்கத்தில் பாஜவினர் மீது மீண்டும் தாக்குதல்: சும்மா இல்லைனா அடி விழும்!

மேற்கு வங்கத்தில் பாஜவினர் மீது மீண்டும் தாக்குதல்: சும்மா இல்லைனா அடி விழும்!

மேற்கு வங்கத்தில்,பாஜகவினர் மீது  மீண்டும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக சிறுபான்மையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்றும் ஹவுரா மாவட்டத்தில் பாஜகவினரை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் சிலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்ற புகாரைத்தொடர்ந்து பாஜகவினர் அங்கு சென்றதாகவும், ஆனால் அவர்களை உள்ளே விட மறுத்து, திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சிலர் கொம்பு, உருட்டுக்கட்டையால் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை கலைக்க கையெறி குண்டுகளையும் அவர்கள் பயன்படுத்தியதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.