"முதல் கூட்டத்தொடர் இல்லை"... ஆளுநரின் உரை தேவையில்லை - அரசின் முடிவுக்கு தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி

தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.

"முதல் கூட்டத்தொடர் இல்லை"... ஆளுநரின் உரை தேவையில்லை - அரசின் முடிவுக்கு தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி

தெலுங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றி இன்று தொடங்கும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. முதல் நாளான இன்று நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கமாக இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரை இல்லாமல் தொடங்குகிறது. இந்த தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து இரு அவைகளின் தலைவர்களும் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினர். இதில் மாநில தலைமை செயலாளர், போலீஸ் டி. ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த தொடரின் தொடர்ச்சி என்பதாலும் ஆளுநரின் உரை தேவையில்லை என்றும் தெலுங்கானா அரசு விளக்கம் அளித்திருந்தது. தெலுங்கானா அரசின் இம்முடிவுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.