விறுவிறு தேர்தல்...மாலை 4 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்...!

விறுவிறு தேர்தல்...மாலை 4 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்...!
Published on
Updated on
1 min read

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மாலை 4  மணி நிலவரப்படி சுமார் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஒருபுறம், காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கட்சிகள் மறுபுறம் என இன்றைய சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும் களமிறங்கியுள்ளன. தொடர்ந்து தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், 1100 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் உட்பட 31 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று  வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் மதியம் 1 மணி நிலவரப்படி 51 புள்ளி 35 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி சுமார் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com