அக்னிபாத் - வரமா?சாபமா?

அக்னிபாத் - வரமா?சாபமா?

இந்தியாவின் முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களுக்கு பணி என்ற அடிப்படையில் அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பிற்கான நடைமுறைகளை தரைப்படை மற்றும் கடற்படை ஏற்கனவே தொடங்கி விட்டன. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டு உள்ளன.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு:

அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முறையீடும் செய்யப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி கண்டனம்:

இந்நிலையில், அக்னிபாத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

”ஆண்தோறும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் அதிகபட்சமாக 3,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளி வரும் ஆயிரக்கணக்கான வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்? பிரதமரின் இது போன்ற புது ஆராய்ச்சிகளால் நாட்டுக்கும் பாதுகாப்பு இல்லை. இளைஞர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகிவிடும்" 
என்று சமூக வலைதளமான ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.