கருப்பாக இருக்கும் நீ விளம்பரத்தில் நடிக்கலாமா.? நிறவெறியால் காவல்நிலையத்தில் புகார் அளித்த நடிகை.! 

கருப்பாக இருக்கும் நீ விளம்பரத்தில் நடிக்கலாமா.? நிறவெறியால் காவல்நிலையத்தில் புகார் அளித்த நடிகை.! 

மேற்கு வங்கத்தில் இணையத்தில் நிறவெறி தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை ஒருவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிறவெறி பாகுபாடு என்பது மனித சமூதாயத்தின் மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ருதி தாஸ் என்ற நடிகை சோப்பு விளம்பரம் ஒன்றின் மூலம் திரைக்கு முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார். சற்று கருத்த நிறம் கொண்ட ஸ்ருதி தாஸை, இணையவாசிகள் பலரும் அவரது நிறத்தை குறி வைத்து சமூக வலைதளங்களில் பல அவதூறு கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர். 

தொடர்ந்து இத்தகைய அவதூறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதால் இனியும் இதனை தாங்கிக் கொள்ள முடியாது என முடிவெடுத்த நடிகை ஸ்ருதி தாஸ், கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.