6 ஆண்டுகளாக மகனை தேடி தவித்த தாய்.. கண்டு பிடிக்க உதவிய ஆதார் அடையாளம்!!

சிறுவயதில் காணாமல் போன வாய் பேச முடியாத மகனை தேடி வந்த தாயும், தாயை பிரிந்து தவித்து வந்த மகனும், 6 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

6 ஆண்டுகளாக மகனை தேடி தவித்த தாய்.. கண்டு பிடிக்க உதவிய ஆதார் அடையாளம்!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை அடுத்துள்ள எலஹங்காவை சேர்ந்தவர் பார்வதி. இவரது வாய்பேச முடியாத மாற்றுதிறனாளியான மகன் பரத், கடந்த 2016ம் ஆண்டு காணாமல் போயிருக்கிறார். இதனால் மகனைத் தேடி அப்பகுதி முழுவதும் தேடி அலைந்த பார்வதி, எலஹங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

எனினும் வருடங்கள் கடந்த போதும் மகன் கிடைக்காததால் மனமுடைந்த தாய் பார்வதி கோவில் கோவிலாக  சென்று தனது மகன் கிடைக்கவேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார். அதேநேரம் சிறுவனை யாரோ நாக்பூர் அழைத்து சென்றுவிட்டனர். இதனால் 6 வருடமாக தாயை பிரிந்து சிறுவன் தவிப்பதை அறிந்த ஒருவர், மாநகராட்சி அலுலகத்திற்கு அவனை அழைத்து சென்று அவனது விழித்திரையை  ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரின் உதவியுடன் சிறுவனின் தாய் பார்வதியிடம் மகன் கிடைத்துவிட்ட தகவலை கூற, அவர் பிறவிப்பயன் அடைந்த ஆனந்ததில் கதறி அழுதிருக்கிறார். உடனே நாக்பூர் சென்ற பார்வதி, தன் மகன் தற்போது நன்கு வளர்ந்திருப்பது கண்டு ஆனந்த கண்ணீர்விட்டுள்ளார். பின்னர், மகனை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார். 6 ஆண்டுகள் கழித்து தாய் - மகன் இணைந்த தருணம், அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.