சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்.. ஆந்திராவில் பயங்கரம்!!

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்.. ஆந்திராவில் பயங்கரம்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடம் அருகே  நடைபெற்ற சாலை விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதராபாத் உள்ள சேரிலிங்கம்பள்ளியிலிருந்து குடும்பாராவ் என்பவர் அவரது  குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆகியோர் இன்று ஆந்திரவில் உள்ள அடுமல்லி கிராத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரத்தில் உள்ள பாலம் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது.காரில் இருந்த குடும்பாராவ்,அவருடைய மனைவி  ஆகியோர் உட்பட ஐந்து பேர் மரணம் உயிரிழந்தனர். காரை ஓட்டிய அவரது மகன் பிரின்ஸ் கை முறிவுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.