90’ஸ் கிட்ஸின் பேவரட் தொகுப்பாளர் மரணம்..! மரணத்திற்கான காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!

மறைந்த ஆனந்த் கண்ணனிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்..!

90’ஸ் கிட்ஸின் பேவரட் தொகுப்பாளர் மரணம்..! மரணத்திற்கான காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தற்போது டிவி சேனல்களும் அதிகம், தொகுப்பாளர்களும் அதிகம் என்பதால், பெரும்பாலான தொகுப்பாளர்களின் பெயர்கள் நமது நினைவில் இருப்பதில்லை. ஆனால் 1990-ம் ஆண்டுகளில் டிவி சேனல்கள் குறைவு. அதில் பணிபுரிந்த தொகுப்பாளர்களை இன்றளவும் அனைவராலும் மறக்க முடியாது. உதாரணமாக, நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெப்சி உமா, மற்றும் ஊர் ஊராக சென்று அங்கிருக்கும் ஸ்பெஷலான விஷயங்களுடன் பேசி புகழடைந்த விஜயசாரதி, நட்சத்திரங்களின் பேட்டி என்றால் ஆனந்த் கண்ணன் என 90’ஸ்-களில் பேவரைட்டாக இருந்து வந்தார்கள். 

இதில் தொகுப்பாளர் ஆனந்த்கண்ணனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். தனியார் மியூசிக் தொலைக்காட்சியில் போன் செய்பவர்களுடன் இவர் செய்யும் இயல்பான உரையாடல்களும், பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு தினங்களில் நட்சத்திரங்களின் பேட்டியில், மக்கள் மனதில் எழும் கேள்விகளை கேட்பது என தனக்கென தனி பாணியையே உருவாக்கி வைத்தவர், பிறகு சிந்துபாத் என்ற சீரியலிலும், சில படங்களிலும் கூட நடித்து வந்தார். தற்போதையை தொகுப்பாளர்களுக்கு ஒரு முன்னோடி என்று சொல்லும் அளவு கொடி கட்டி பறந்த ஆனந்த் கண்ணன், சில வருடங்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதியாக வாழ்ந்து வந்தார். 

பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாக இருந்த சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புற்றுநோயால் அவதியடைந்த ஆனந்த் கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இயக்குநர் வெங்கட் பிரபு இதனை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். பொதுமக்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் ஆனந்த் கண்ணனின் மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.