வேறொருவருடன் தொடர்பா.? கருகலைப்பா..? வாயை திறந்த சமந்தா

வேறொருவருடன் தொடர்பா.? கருகலைப்பா..? வாயை திறந்த சமந்தா

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்ணனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நாகசைதன்யாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவு அறிவிப்பை வெளியிட்டனர். 

இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த டைவர்ஸ்க்கு பல வகையான காரணங்கள் சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக இதுவரை பதில் கொடுக்காமல் இருந்து வந்தார் சமந்தா. 

இந்நிலையில் நேற்று சோகமான பதிவை பதிவிட்ட சமந்தா இன்று இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் சில வதந்திகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட நெருக்கடியில் உங்களின் உணர்ச்சிகள் என்னை மூழ்கடித்துள்ளது. என் மீது இறக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. 

அதேவேளையில் நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, கருகலைப்பு செய்தேன் என்று என்னைப்பற்றி பொய்யான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. 

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து நான் மீண்டு வர வெகுநாட்கள் ஆகும். இதுஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.