இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒரு புகைப்படத்திற்கு ரூ.3கோடி..! அதிக பணம் சம்பாதிக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா..!

ஒரு புகைப்படத்திற்கு ரூ.3கோடி சம்பாதிக்கும் ப்ரியங்கா சோப்ரா..!

இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒரு புகைப்படத்திற்கு ரூ.3கோடி..!  அதிக பணம் சம்பாதிக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா..!

இன்று உலகளவில் அதிகளவு பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இன்ஸ்டாகிராமை 500 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதுடன், ஒரு தொழிலை உலக அளவில் கொண்டு சேர்க்கவும் இச்செயலி பயன்படுவதால், அதிகளவு மக்கள் இதனை விரும்புகின்றனர். 

இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் உண்டு. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக அதிகளவு சம்பாதிக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் ஹிந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா 27வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் பிந்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் ஸ்பான்சர் பதிவு ஒன்றுக்கு ரூ.11.9கோடி வருமானம் கிடைக்கிறதாம். அந்த வரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பதிவிடும் ஒரு ஸ்பான்ஸர் பதிவுக்கு ரூ.3கோடி வருமானமாகப் பெருகிறார். 

இந்த வரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஒரு பதிவிற்கு ரு.5.08கோடி சம்பாதிக்கிறார்.