குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நயன்தாரா...

குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நயன்தாரா...

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்கள் குழந்தைகள் பெயரை அறிவித்துள்ளனர்.

தமிழத் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அக்குழந்தைகளுக்கு தற்போது பெயர் சூட்டியள்ளனர். குழந்தைகளின் பெயர்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கள் குழந்தைகளுக்கு 'உயிர் ருத்ரோநீல் N சிவன்' மற்றும்  'உலக் தெய்விக் N சிவன்'எனப் பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்