கர்ப்பகால பைபிள்..! கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு..!

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக புகார்..!

கர்ப்பகால பைபிள்..! கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு..!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் தனது புத்தகத்திற்கு வைத்துள்ள பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு தைரமூர் அலிகான் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக கர்ப்பமுற்றுள்ளதாக கரீனா அறிவித்தார். அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.  

கர்ப்பகாலத்தில் தான் சந்தித்த இன்னல்கள் மற்றும் கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் கரீனா. இந்த புத்தகத்திற்கு PREGNANCY BIBLE என பெயரிடப்பட்டது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விற்பனை செய்ய கரீனா சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்து வருகிறார். 

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே என்பவர், இந்தப் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பூகாரில், புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக உள்ள நிலையில், கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.