யார் இந்த அருண்மொழி வர்மன்? ப்ரொமோஷன் வேலைகளைத் துவங்கிய பொன்னியின் செல்வன் குழு:

பொன்னியின் செல்வன் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ரொமோஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.

யார் இந்த அருண்மொழி வர்மன்? ப்ரொமோஷன் வேலைகளைத் துவங்கிய  பொன்னியின் செல்வன் குழு:

சோழர்களின் பெருமையை விவரிக்கும் வகையில், வரலாற்று உண்மைகளுடன் சேர்த்து கல்கியால் எழுதப்பட்ட ஒரு மாபெரும் கதை தான் பொன்னியின் செல்வன். அதனை படமாக்க, பல வருடங்களாக பல பெரும் திரைப் பிரபலங்கள் ம்ுயற்சி செய்தனர். எம்ஜிஆர் உட்பட பலரும் இந்த கதையை படமாக்க முயற்சி செய்த நிலையில், பல ஆண்டு தமிழ் சினிமா பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படம் மணிரதனத்தின் படைப்பாக உருவாகி இருக்கிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம். முன்னதாக இந்த பொன்னியின் செல்வன் கதையை படித்து வியந்த எம்.ஜி.ஆர், அதனை படமாக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் இதே போன்று நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தை இயக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.   

தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில்  வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. ராஜ ராஜ சோழனின் கதையைக் கூறும் இந்த படத்தின் அருண்மொழி வர்மன் பற்றிய தகவல்களை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். உண்மைக் கதைதான் என இந்த கதைக் குறித்து அவர்கள் கூறியது தமிழர்களின் பெருமையை விவரிக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து, அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ மூலம், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.