பட்டியல் தயார் செய்ய கூறிய விஜய்....எதற்காக?!

பட்டியல் தயார் செய்ய கூறிய விஜய்....எதற்காக?!

மாவட்ட வாரியாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்தலில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகிகளுக்கு தயார் செய்ய நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்தலில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்றிருந்த திண்டுக்கல் மாணவி நந்தினி சந்தித்து மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஜய் இந்த தேர்வில் மாவட்டங்கள் வாரியாக முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய மாணவ மாணவியரின் பட்டியலை சேகரிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அதே போல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறும் நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு தேவைப்படும் மேற்கட்ட படிப்பிற்கான பணத்தொகையையோ அல்லது உதவிகளையோ செய்வதற்காக இந்த பட்டியல் தயார் செய்து வருவதாகவும், இந்த உதவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  முன்னதாக இந்திய தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததும் அதேபோல் ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சேகரிக்க படிவம் அனுப்பியிருந்தார்.

அதேபோல் கடந்த வாரம் விலையில்லா மருந்தகம் நடத்தும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பணத்தொகை ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் தெரிவித்து இருந்தார்.  அதேபோல் இரு தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் முட்டை போன்றவற்றை முறைப்படி செய்யாத மாவட்டங்கள் முறையாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுரை தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு நலத்திட்டங்களை வழங்குவதற்காக நடிகர் விஜய் தொடர்ந்து செயல்பட்டு வருவது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் என்ற செய்தியும் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிக்க:  ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்...!!!