விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

கடந்த ஜூன் 9 ம் தேதி, காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு  ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில்,  அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதால்  ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் இந்த குழந்தைகள் தத்தெடுக்கப் பட்டவையா அல்லது “வாடகை தாய்” மூலமாக குழந்தைகள் பெற்றுக் கொண்டனரா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.