ரோட்டு கடையில் பேரம் பேசிய நயன்தாரா.. டிரண்டாகும் வீடியோ

ரோட்டு கடையில் பேரம் பேசிய நயன்தாரா.. டிரண்டாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். 

இதுதவிர அட்லி படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நயன்தாராவிற்கு மார்க்கெட் குறையவே இல்லை.

நயன்தாரா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.  

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மும்பையில் உள்ள ரோட்டு கடை ஒன்றில் ஹேண்ட் பேக் வாங்கும் நயன்தாரா கடைக்காரரிடம் பேரம் பேசுவதை போன்ற வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில ரசிகர்கள் நயன்தாரா பேரம் பேசும் விதம் கூட செம க்யூட்டாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அந்த வீடியோ காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறுகிறார்கள்.