தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து

பிரபல பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து, தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வலியுறுத்தி டுவிட் செய்துள்ளார்.

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து

பிரபல பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து, தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வலியுறுத்தி டுவிட் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில்,மத்திய அரசின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மிக உயரிய  பால்கே விருதினை ரஜினிகாந்துக்கு வழங்கினார். இதையடுத்து,தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டரில் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். அதில்,“பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.