பாஜக வெற்றி பெறவே இந்த சிறப்பு வ்ழிபாடு... நடிகை நமீதா!!

பாஜக வெற்றி பெறவே இந்த சிறப்பு வ்ழிபாடு... நடிகை நமீதா!!

என்னுடைய பிறந்தநாள் மற்றும் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  சிறப்பு வழிபாடு செய்ய வந்ததாக நடிகை நமீதா பேட்டியளித்துள்ளார்.

நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமிதா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிஸ்வரர் திருக்கோவிலில் 1008 தாமரை மலர்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்.  அதன் பின்னர் திருக்கோயிலில் இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாஜக பெயர் உறுப்பினர் நமீதா, “என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கபாலீஸ்வரர் திருக்கோயில் குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளேன்.  இது எனக்கு மிகவும் சிறப்பான நாள்.  கர்நாடகா தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இன்று 1008 தாமரை மலர்களை வைத்து இந்த சிறப்பு பூஜையை மேற்கொண்டேன்.” எனப் பேசினார்.

மேலும், “கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது.  ஆகவே கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.  எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான்காயிரம் தெரு நாய்களுக்கு உணவளிக்க உள்ளேன். ” எனக் கூறினார்

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த நமீதா அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  பட்டியல் தயார் செய்ய கூறிய விஜய்....எதற்காக?!