இரண்டாவது முறையாக தேனாண்டாள் முரளி வெற்றி...!

இரண்டாவது முறையாக தேனாண்டாள் முரளி வெற்றி...!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையும் படிக்க : 12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!

வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி  150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.