கோலாகலமாக நடந்தேறியது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்! மங்கள நாண் அணிவித்து நயந்தாராவை வாழ்க்கை துணையாக ஏற்றார் விக்னேஷ்!!

மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் கண்ணாடி மாளிகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. 

கோலாகலமாக நடந்தேறியது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்! மங்கள நாண் அணிவித்து நயந்தாராவை வாழ்க்கை துணையாக ஏற்றார் விக்னேஷ்!!

6 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது திருமணம் என்னும் பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று கோலாகலமாக நடந்தேறியுள்ளது. இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயந்தாராவின் கழுத்தில் மங்கள நாண் அணிவித்து தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். 

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ கண்ணாடி மாளிகையில் அரங்கு அமைக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி. டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தையும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையையும் உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை இயக்குநர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகையை வாங்கி பரிசளித்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.