முதல் கணவரால் வந்த பழக்கம்.. இப்போது வரை விட முடியவில்லை.... ஊர்வசி 

குடிபழக்கத்தை மட்டும் என்னால் விடவே முடியவில்லை என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

முதல் கணவரால் வந்த பழக்கம்.. இப்போது வரை விட முடியவில்லை.... ஊர்வசி 

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஊர்வசி. 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வெளியான புத்தம் புது காலை, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் ஊர்வசியின் நடிப்பு வெகுவாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. 

காமெடி கதாபாத்திரம்,குணசித்திர நடிப்பு என்று அனைத்து திறமைகளும் பெற்றவர். இவர் 2000ஆம் ஆண்டு மனோஜ் என்பவரை திருமணம் செய்து 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

பின்பு 2013ஆம் ஆண்டு சிவபிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். என்ன தான் திரையுலகில் மிளிர்ந்து காணப்பட்டாலும் குடிப்பழக்கத்தை மறக்க முடியாமல் எங்கு சென்றாலும் பாட்டிலும் கையுமாக இருக்கிறாராம்.

 இவருக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது என்று பார்த்தால் முதல் கணவர் மனோஜ் குடும்பத்துடன் சேர்ந்து குடிப்பார்க்கலாம், கணவரை விட்டுவிட்டார், ஆனால் அந்த பழக்கம் தற்போது வரை விட முடியவில்லை என கூறுகிறார்கள். இந்த குடிப்பழக்கத்தினால் ஒருமுறை விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.