பருத்திவீரன் புகழ் 'சித்தப்பா' வுக்கு பெரிய ஆப்பாக வைத்த முதல் மனைவி....!
பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பாவாக நடித்த புகழ் பெற்றவர் நடிகர் சரவணன். இவருக்கு திருமணம் ஆகி சூரியஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல் மனைவி சூரிய ஸ்ரீ இருக்கும் வீட்டில் அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்யுமாறு மனைவியை அடித்து மிரட்டி ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டுவதாக அவரது மனைவி முதலமைச்சர் தனி பிரிவில் குற்றச்சாட்டு மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சூரியஸ்ரீ பேசும்போது,
நடிகர் சரவணன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள வீட்டை வாங்குவதற்கு தன்னுடைய நகைகள் மற்றும் கையில் இருந்த ரொக்கப்பணம் ஆகியவற்றையெல்லாம் கொடுத்து வீடு வாங்கியதாகவும் அந்த வீட்டைசரவணன் தன் பெயரில் எழுதிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இடையில் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு வந்த சரவணன், பிக் பாஸ் சென்று வந்த பிறகு கையில் கொஞ்சம் பணம் கிடைத்ததால் ஸ்ரீதேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு பக்கத்து தெருவில் வேறு ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சமீப நாட்களாக தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னை உடனே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு 30 அடியார்களோடு வந்து தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க } DMK FILES 2-ஆம் பாகம் வெளியிடப்படும்...அடுத்த அப்டேட் கொடுத்த அண்ணாமலை!
இது தொடர்பாக தன்னுடைய நண்பர்களோடு வந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் பிரிவில் மனு கொடுத்து, அரசு இதில் தலையிட்டு தனக்கு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க } "ரேஷனில் பிளாஸ்டிக் அரிசியா?" மக்கள் பீதி!