மலைவாழ் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த நடிகை...

மலைவாழ் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த நடிகை...

பிரபல நடிகை நித்யா மேனன் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம்  வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு நேற்று வந்தார். தொடர்ந்து அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளை தூக்கி அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இவரது நடிப்பு, பலரது மனதையும் கவர்ந்திருப்பது எப்படி தவிர்க்க முடியாத உண்மையோ, அது போலவே தான் அவரது திரைக்கு வெளியில் உள்ள வெள்ளை மனமும். அனைவரையும் நெகிழ வைத்த இந்த சம்பவமானது சிலருக்கு கண்களையும் கலங்க வைத்தது என்றே சொல்லலாம். 

எவ்வித ஆனவமும் இல்லாமல், உண்மை தன்மையுடன் இருக்கும் நடிகை நித்யா மேனனுக்கு, தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பது மிகையாகாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அடுத்தடுத்து ரிலீஸாகும் தனுஷ் படங்கள்.. நானே வருவேன் படத்தை தொடந்து ’’வாத்தி’’ கம்மிங்..!