எச்சில் துப்பிய நடிகை ...! ஒவ்வொன்றாக அம்பலமாகும் அவலங்கள்...!

எச்சில் துப்பிய நடிகை ...! ஒவ்வொன்றாக அம்பலமாகும் அவலங்கள்...!

எச்சில் துப்பி அசிங்கப்படுத்தியதாக நடிகை பார்வதி நாயர் மீது அவரது வீட்டில் பணி புரிந்த ஊழியர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.  

தமிழ் திரையுலகில், நிமிர்ந்து நில் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால்,  உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற திரைப்படத்தில் நடித்து, தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

இந்நிலையில், தன் மீது எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டுவதாக நடிகை பார்வதி நாயர் மீது, அவரது வீட்டில் பணி புரிந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி,  நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகிய பொருட்களை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், திருடியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும், தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது மட்டுமல்லாமல், தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகார் கொடுத்த சுபாஸ் சந்திர போஸ் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன்  மது விருந்து நடத்தியதை பார்த்ததால், பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும், இரவில் நடந்ததை வெளியில் சொல்லி விடுவேனோ என்ற அச்சத்தில், அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாக சுபாஷ் சந்திரபோஸ் கூறினார். மேலும் பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதோடு, அடியாட்களை வைத்து அடித்ததாகவும் தெரிவித்தார். 

அதோடு, தான் அனுபவித்த பல கொடுமைகளை எழுத்து பூர்வமாக, கடந்த 27ம் தேதி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், பார்வதி நாயர் மீது புகார் அளித்ததால், 'என் மீதே புகார் அளிப்பாயா' என்று காட்டத்துடன் பேசிய பார்வதி நாயர், அவரை பாலியல் வன்கொமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளிப்பேன் என மிரட்டினார் எனவும் கூறியுள்ளார். 

மேலும், தான் திருடியதாக சொல்லப்படும் எந்த பொருட்களையுமே  இதுவரை அவரது வீட்டில் பார்க்கவில்லை எனவும் கேமராவை சார்ஜ் செய்து பார்வதி நாயர் கையிலே தான் கொடுத்து விட்டதாகவும், வேண்டும் என்றே என் மீது திருட்டு பட்டம் கட்டுவதாகவும் பார்வதி நாயர் மீது புகாரளித்துள்ளதாக, சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.

இதையும் படிக்க : அப்சல்கானின் கல்லறையை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடித்த வழக்கு நாளை விசாரணை!!!