"அழகுக்கு அழகு சேர்த்த யமுனை ஆறு"

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் தாஜ்மகால் அருகே பாய்ந்தோடும் யமுனை ஆறு, தாஜ்மகாலின் அழகை மேலும் அதிகரித்துள்ளது.

"அழகுக்கு அழகு சேர்த்த யமுனை ஆறு"

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் தாஜ்மகால் அருகே பாய்ந்தோடும் யமுனை ஆறு, தாஜ்மகாலின் அழகை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, தாஜ்மகால் அருகே உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆற்றில் பாய்ந்தோடும் நீரையும், தாஜ்மகாலையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் போது, கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய ஒடிசாவின் சம்பல்பூரை சேர்ந்த சுற்றுலா பயணி அந்தர்யாமி பிரதான், கடந்த காலங்களில் தாஜ்மஹாலை பார்க்க தாம் பல முறை வந்துள்ளதாகவும், ஆனால் இந்த முறை யமுனை ஆற்றில் அதிகரித்த நீர்மட்டம் வித்தியாசமான அனுபவத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.