' தமிழ் ராக்கர்ஸ் ' மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ள ஏவிஎம் நிறுவனம்...!

தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடரின் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் நுழைந்துள்ளது பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம்.

' தமிழ் ராக்கர்ஸ் ' மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ள ஏவிஎம் நிறுவனம்...!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். அறிவழகன் இயக்கியுள்ள இந்த இணைய தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், வாணி போஜன், அழகப்பெருமாள், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, இயக்குனர் அறிவழகன் " இக்கதையை இயக்க என்னிடம் கேட்ட போது மூன்று விஷயங்களுக்காக இதனை எடுக்க ஒப்புக்கொண்டேன். தமிழ் ராக்கர்ஸ் இந்த சினிமா தொழிலை அழித்து வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது. இந்த முழு தொடரையும் பார்த்து முடிக்கும் போது ரசிகர்களின் மனநிலை மாறும். ஏவிஎம் நிறுவனம் எவ்வளவு பெரிய நிறுவனம். இந்நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமையான தருணம்." என பேசியுள்ளார். 

மேலும் படம் குறித்து தயாரிப்பாளர் அருணா (ஏவிஎம்), " இது ஏவிஎம் நிறுவனத்தின் கம்பேக் என்று பேசுகிறார்கள். என்னிடம் கேட்டால் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாதாரணமாக படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்களுக்கு இதனை யார் அப்லோட் செய்கிறார்கள் என்று தெரியாது. கலைஞர்களின் கடின உழைப்பை எப்படி திருடுகிறார்கள் என்று இப்படத்தில் காணலாம்." என கூறியுள்ளார்.  

படத்தின் நாயன் அருண் விஜய், " சினிமாவுக்கும் ஓடிடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியாது. இக்கதையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற‌ சோனி மற்றும் ஏவிஏம்மின் முயற்சிக்கு நன்றி. நிறைய பேரின் உழைப்பு. ஒரு படத்தை எடுக்கும்போது எவ்வளவு வலி இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு உணர்வார்கள்." என கூறியுள்ளார்.